சிறந்த தேசிய மாணவர் படை விருது பெற்ற ராமகிருஷ்ணா கல்லூரி மாணவன்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த மாணவன் அருண், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தேசிய மாணவர் படை முகாமில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த தேசிய படை மாணவர் விருதை பெற்றார். மேலும், தென்னிந்திய அளவில் நடைபெற்ற தகுதிச்சுற்று பிரிவில் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் ஆகிய மண்டலங்களில் இருந்து சுமார் 250 பேர் கலந்து கொண்ட போட்டிகளில் அருண் கோவை 2 தமிழ்நாடு பேட்டரி என்.சி.சி பிரிவின் சார்பாக துப்பாக்கி சுடும் போட்டியிலும், சிறந்த மாணவருக்கான போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் வெளிநாடுகளில் பயிற்சி பெற பல்வேறு தகுதி சுற்றுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், கல்லூரி சார்ந்த தகவல் தொழில்நுட்ப துறை மாணவி அக்ஷ்ய பிரியா டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பிரதம மந்திரி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பாக சாதனை புரிந்தார்.

இவர்களை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தேசிய மாணவர் கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி எம்.ரமேஷ் மற்றும் துறை தலைவர், எம்.செந்தமிழ் செல்வி ஆகியோர் பாராட்டினார்கள்.