உண்டியலும், புத்தகமும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்

திருவள்ளுவர் தின விழாவில் வானதி சீனிவாசன்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் கோவை மேற்கு ரோட்டரி க்ளப் இணைந்து திருவள்ளுவர் தின விழாவை நடத்தின. இதில் பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் ஜெயகாந்தன், ரஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் குழந்தைகள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. பிறகு குழந்தைகளும் திருக்குறள் புத்தகமும், உண்டியலும் பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வானதி சீனிவாசன் பேசுகையில், திருக்குறள் தமிழர்களின் அடையாளம். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது என்றார்.