பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவையை தலமையிடமாக கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த பல ஆண்டுகளாக செய்து வரும் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவருகின்றது.

முழுக்க முழுக்க இளைஞர்களால் வழி நடத்தப்படும் இந்த அறக்கட்டளையின் 20 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வடவள்ளி பகுதியில் உள்ள கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்திற்கு தேவையான உணவு, அரிசி, பழங்கள், பால் பவுடர், பிஸ்கட் மற்றும் அடிப்படை மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இது குறித்து குழுவின் சார்பில், தொடர்ந்து இது போன்று நலத்திட்ட உதவிகளை செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் கௌரி சங்கர், சரவணன், கார்த்திக், சூர்யா, ராஜா, மணி, இளங்கோ,ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.