கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆன்லைன் தேர்வு – ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு !

முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர்நீதி மன்றம் ஆசிரியர் தேர்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

2018 – 19ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்விற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 12ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கணினி ஆசிரியர்கள் மட்டும் ஆன்லைன் தேர்வு எழுதவும், பிற ஆசிரியர்கள் அச்சுத்தாளில் தேர்வு நடத்த வேண்டும் என, திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஜூலை 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.