இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைகள் இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கை நிகழ்த்தியது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பெங்களூருவில் உள்ள ரேவா பல்கலைக்கழகம் கணினி அறிவியல் மற்றும் பயன்பாடுகள் துறைப்  பேராசிரியர் & இயக்குநர் செந்தில், இன்டெல்லிபர் சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி யோதேஷ்குமார், கணினி தொழில்நுட்பத்துறையின் தலைவர் ரங்கராஜ், உதவிப்பேராசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில்  பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.