சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி மாணவ மாணவியர் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு தகுதி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்து உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர் மாநில அளவில் நடைபெறுகின்ற தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்று உள்ளனர். கோவை நேரு விளையாட்டு ரேஞ்சில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், பதினாறு வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில், பொன்சிவப்ப்ரியா ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்றார். மேலும் தாமரை செல்வன், பிரநீத் உள்ளிட்ட மாணவர்களும் வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் மூவரும் தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினை பெற்று உள்ளனர். வெற்றிபெற்ற மாணவி மற்றும் மாணவியரை பள்ளியின் நிர்வாக அரங்காலவர் ராமசாமி. பள்ளி செயலர் சிந்தனைக் கவிஞர் தமிழ்ச்செம்மல் கவிதாசன், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி , துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.