இந்துஸ்தான் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

ஈரோடு, ஈங்கூர் அருகில் அமைந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பாக “பிட் ஃஇந்தியா” விழிப்புணர்வு நடைபயணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெருந்துறை சரக துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உடற்பயிற்சியின் பயன்கள், அவசியங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கல்லூரியின் முதல்வர் ராமன், இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஸ்பிரபு மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.