மிக்ஜாம் புயல் மீட்புப் பணி : மாநகராட்சி சார்பில் இராட்சத மோட்டார்கள் அனுப்பிவைப்பு

கோவை மாநகராட்சி சார்பில் சென்னை மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளுக்காக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பம்பு தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 41 HP திறன் கொண்ட, மணிக்கு 4 இலட்சம் லிட்டர் மழைநீர் வெளியேற்றும் 6 எண்ணிக்கைகளான அதிநவீன இராட்சத டீசல் மோட்டார்களை, உடனடியாக மாநகராட்சி மீட்புக்குழுவுடன் சேர்த்து சென்னைக்கு அணுப்பி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.