கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம்

தமிழகம் முழுவதும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்து வந்த பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்ட இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கோவையின் புதிய மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.