எஸ்.என்.எம்.வி கல்லூரி சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கல்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நன்னையம் சேய் அறக்கட்டளை இணைந்து அண்மையில் ‘பசுமை அலை’ என்ற தலைப்பினையொட்டி மரக்கன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்றார். நன்னையம் சேய் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அருண் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் நோக்கம் நம் சமூகத்தில் சுத்தமான காற்று, தண்ணீர், உணவு, மருந்து ஆகியவற்றை உற்பத்தி செய்யவும் இராசாயனம், ஒலி மற்றும் சுற்றுப்புறத்தை மாசுபாடுகளிலிருந்து பாதுகாப்பதும் ஆகும். ஆகையால் சுமார் 1000 மரக்கன்றுகள் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மாணவ மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வினை இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் கார்த்திக் ஒருங்கிணைத்தார். இதில் நன்னையம் சேய் அறக்கட்டளையின் குழுவினர்கள் கலந்துகொண்டனர்.