ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர் உமா குத்துவிளக்கு ஏற்றி விழா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

விழாவையொட்டி மாணவ,மாணவியர் கேரள முறையிலான பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் அத்தப்பூகோலம் வரைந்து மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர். பின்னர் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதையடுத்து, கேரள முறையிலான இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எலெக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் வினு மற்றும் சந்தோஷ்குமார்  ஆகியோர் செய்திருந்தனர்.