கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு வாக்கத்தான்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணி வுமென்ஸ் செண்டர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி க்ளப் காட்டன் சிட்டி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.