கே ஜி பவுண்டேசன் சார்பில் விருது வழங்கும் விழா

கோவையில் உள்ள கே ஜி பவுண்டேசன் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது . இந்த கே ஜி பவுண்டேசன் சார்பில்  சமூக சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூகத்தில் பல்வேறு விதங்களில் அறியப்படாத சமூக சேவை செய்யும் நபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் கே ஜி நிறுவனத்தின் தலைவர் பக்தவச்சலம் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிக்கு விருது வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலை கழகத்தின் கவர்னிங் கவுன்சில் உறுப்பினராக இருந்த பத்மநாபன் அவர்களுக்கு Social scientist விருது வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள டிப்ளமோ நேஷனல் போர்டை சார்ந்த அப்ஜித், ராகேஷ் சர்மா, தவே உள்ளிட்ட மூன்று பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. நேஷனல் போர்ட் ஆப் தேர்வுகள் எப்படி இயங்குகிறது என்பது குறித்து இவர்கள் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .