சுகுணா ரிப் வி பள்ளியில் கைப்பந்து போட்டி

ஸ்ரீ ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, சுகுணா ரிப் வி பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் துவக்க நிகழ்விற்கு, சுகுணா கல்வி குழுமங்களின் தாளாளார் சுகுணா கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.