சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் திருநங்கைகள் அடாவடி

கோவை, மேட்டுப்பாளையம் – தடாகம் ரோட்டில் உள்ள சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக திருநங்கைகள், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காவ்யா (21) மற்றும் விழுப்புரம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த கலை (25) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.