கோவை சுகாதார துறை சார்பில் 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில், ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.

சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் கோவை குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி, வடவள்ளி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் கண்ணம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கணுவாய் அரசு நடுநிலைப்பள்ளி, காரமடை தோலாம்பாளைம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப்பள்ளி என 6 இடங்களில் நடக்கிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தியுள்ளார்.