சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது!

மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் விலை மற்றும் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் காரணமாக டில்லியில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டரின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்ததகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த மாதம் வரை ரூ.320.49 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.