காஸ் கசிவால் விபத்து தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

கோவை, அன்னுார் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

இங்கு பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்கள் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.கடந்த 11ம் தேதி இரவு இதில் ஒரு அறையில் தொழிலாளர்கள் சமையல் செய்யும்போது காஸ் கசிவால் தீ பிடித்தது. இதில், அனுராக்சிங், 28. தன்ஜெய் சிங், 33. தரம்வீர், 40. வீரேந்திர ஜா, 37. மகாதேவ் சிங், 23. ஆகிய ஐந்து பேர் உடல் கருகியது.

இதில் நான்கு பேர் கோவில்பாளையம் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் கோவை தனியார் மருத்துவமனையிலும்சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர், சுந்தர் நகர், ரன்பீர் சிங் மகன் அனுராக் சிங், 28. இறந்தார். நேற்று மதியம் துப்ராவை சேர்ந்த லல்லு சிங் மகன் தன் ஜெய் சிங், 33. என்பவரும் இறந்தார்.

மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.