கோவையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!

கோவையில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 17ம் தேதி சனிக்கிழமை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ 110கி.வா மின் நிலையம் மற்றும் சூலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி) மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், ஏர்போர்ஸ், சுக்கிரவாத்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட் ரேஸ்கோர்ஸ், சிவானந்தா காலனி, சூலூர், டிஎம் நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி புதூர், பி.எஸ் நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.