நம்பி வாருங்கள்..! நலம் பெறுங்கள்..!

வருமுன் காப்போம்!

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்தது என்பார்கள். அதுபோல ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்கச் சென்றால், இலவச இணைப்பாக புது நோயொன்று புதுவரவு ஆகிறது. அதனால் மருத்துவமனையே செல்ல வேண்டாம் என்றுதான் எண்ணத் தோன்றும். இக்கருத்தை மறுக்கவும் இல்லை, எதையும் மறைக்கவும் இல்லை. உண்மையைப் பேசுகிறேன்… உங்கள் நலம், உங்கள் கைகளில் இருந்தால்… உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் காப்பாற்றிக் கொண்டால்.. நீங்கள் எதற்காக போக வேண்டும் மருத்துவமனை? ஏன் எடுக்க வேண்டும் சிகிச்சை..? யோசித்தீர்களா… இல்லையே.

எதை செய்யக்கூடாது… எதைப் பார்க்கக் கூடாது… எதை உண்ணக்கூடாது.. எதை பேசக்கூடாது என்று நம் முன்னோர்கள்… தமிழ் பாரம்பரியம் சொன்னதோ, அதற்கு எல்லாம் எதிர்மறையாகத் தானே செய்கிறீர்கள். அப்படி இருக்க விளைவுகள் மட்டும் எப்படி நேர்மறையாக இருக்க முடியும்?! தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி, தியானம், வேளைதோறும் நல்ல உணவு என்று வாழ்ந்து பழகினால் நலம் தானே உங்கள் உடன் வரும்… கெட்டது தானே விலகி ஓடும்.

வாழத் தெரியாதவர்கள் இருக்கும் ஊரில்.. ஆளத் தெரியாதவர்கள் ஆள்வார்கள் என்றார் நமது வேதாத்திரி மகரிஷி அவர்கள். இக்கருத்தை மருத்துவ முறைப்படி, எதை சாப்பிடக்கூடாதோ, எப்படி சாப்பிடக் கூடாதோ அப்படி சாப்பிட்டு வாழ்ந்து பழகினால் இந்த உடல் நம்மைத் தவறாகத்தானே ஆளும்.? தெரிந்தே தவறு செய்வது குற்றம் ஆகும். திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கும் மேல் ஒருவருக்குக் கிடைத்தவுடன், தனக்கும் கீழ் வசதி உள்ளோருக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதனால் மனிதனாக பிறந்த நீங்கள் புனிதனாக உருமாறுவீர்கள்.

இந்த உயர்ந்த நோக்கம் உங்கள் உள்ளத்திற்கான சிறந்த சிகிச்சை. இப்படி உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால், தேவையில்லை மருத்துவ சிகிச்சை. இந்த கலிகாலத்தில் இப்படி வாழ்வது சாத்தியம் இல்லை. அதனால் பெருகிவிட்டன நோய்கள்… மருத்துவமனைகள்..! கூடுதல் சிறப்பாக சில குளறுபடிகளும். ஆனால் எங்கள் கே.ஜி. மருத்துவமனையின் 50 வருட மருத்துவப் பயணத்தில் குளறுபடிகளுக்கு வாய்ப்பில்லை. காரணம், இங்கே இருப்பவர்கள் உயர்ந்த தகுதியையும் சிறந்த அனுபவத்தையும் தம்மிடம் கொண்ட திறமைசாலிகள்.

இதுபோன்ற நல்ல மருத்துவப் பணியாளர்களை, செவிலியர்களைக் கொண்டு இயங்கும் சிறந்த மருத்துவமனையான எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் எந்தவித நோய்க்கும் சரியான, சிறப்பான, தரமான சிகிச்சை அளிக்கிறோம்.

நோய் வராமல் தடுக்க பெற்றோர்களும் உற்றார்களும் குருமார்களும் நல்லதொரு கருத்துக்களை பிள்ளைகள் மனதில் நாளும் அள்ளித் தெளித்திட வேண்டும். தினமும் திருக்குறள் போன்ற சிறந்த புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும். வருமுன் காப்பது அறிவுடைமை என்று உணர்ந்து நீங்கள் இவ்வாறு செயல்பட்டால், நோய்கள் உங்களை என்றும் நாடி வராது.

ஒருவேளை, உங்கள் வாழ்வில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்தாலும் அதற்கு உரிய நல்ல சிகிச்சை அளித்து நோயை விரட்ட எங்கள் மருத்துவமனை உள்ளது என்பதை மறக்க வேண்டாம். எங்கள் 50 வருட மருத்துவப் பயணத்திற்கான உங்கள் வாழ்த்து, எங்கள் பாக்கியம். உங்களுக்கு சேவை புரிவது எங்களுக்குக் கிடைத்த புண்ணியம்.

மேலும் தகவல்களுக்கு 0422 222 2222, 98422 66630.

மக்களின் ஆசிர்வாதம் பெற்ற மருத்துவமனை!

கே.ஜி. மருத்துவமனையில் 1979 ஆம் ஆண்டு முதல் பொது அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவரும் பிரபல டாக்டர் வி.பி.சண்முகசுந்தரம் கூறியதாவது, ‘மருத்துவர் ஜி.பக்தவத்சலம் ஐயா அவர்கள்தான் எனது குருநாதர். நான் மருத்துவப் படிப்பு முடிந்ததும் எனது தந்தை, ஐயா அவர்களிடம் என்னை ஒப்படைத்தார். அதன்பின்னர் கடந்த 44 வருடங்களுக்கும் மேலாக ஐயா அவர்களைப் பின்பற்றி மருத்துவ சேவை செய்து வருகிறேன். தலை முதல் கால் வரை அனைத்து விதமான அறுவைசிகிச்சைகளும் செய்வேன். இதுவரை கிட்டத்தட்ட 1.5 லட்சம் அறுவைசிகிச்சைகள் செய்துள்ளேன்.

ஆரம்பகாலத்தில் தொலைதூர ஊர்களில் இருந்துவரும் பல்வேறு நோயாளிகளுக்கு, ஐயாவுடன் இணைந்து அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளேன். ஜி.பி. அவர்களிடமிருந்துதான் பல்வேறு அறுவை சிகிச்சைகள் குறித்து கற்றுக்கொண்டேன். அவரது நினைவாற்றலும், பேச்சாற்றலும் எனக்கு வியப்பூட்டும் அதிசயம். அவரைப் போன்ற சிறந்த மருத்துவரிடம் மிக அருகிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்.

நம்மை நம்பிவரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து, அவர்களை குணமாக்கி, மகிழ்ச்சியாக வீட்டுக்கு அனுப்பும்போது அவர்கள் வழங்கும் ஆசிர்வாதம் இந்த உலகில் உள்ள எல்லா செல்வங்களையும்விட மிகச் சிறந்தது. அப்படிப்பட்ட ஆசீர்வாதம் எப்போதும் கே.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு அளவின்றி கிடைத்தது… இன்னும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அம்சம், இருபது வருடங்களுக்கு முன்னர் 28 வயது இளைஞரை மரணப்படுக்கையில் இங்கே அழைத்துவந்தனர். அவருக்கு மூச்சு இருந்தது, ஆனால் முற்றிலும் எந்தவிதமான உடல் செயல்பாடுகளும் இல்லை. அவரைக் காப்பாற்ற சொல்லி உடன் வந்தவர்கள் கதறினர். இறந்துவிடுவார் என்ற நிலையில் இருந்த அவரைக் காப்பாற்றுவது ஒரு மிகப்பெரிய சவால் என்றாலும் அதனைத் துணிவோடு ஏற்று, அழுகிப்போன அவரது சிறுகுடல் முழுவதையும் எடுத்து, பெருங்குடல், இரைப்பை சரிசெய்து,  3 மாதம் தொடர் சிகிச்சை அளித்து, முழுவதும் அவரைக் குணப்படுத்தி அனுப்பினேன். இன்றும் அவர் உயிருடன் இருக்கிறார். அதேபோல், மற்றொரு நோயாளிக்கு பித்தப்பை அழுகி வெடித்து, வயிறு முழுவதும் பரவிவிட்டது. அத்துடன் அவருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருந்தது, வயதும் அதிகம், உடல் பருமனும் அதிகம், மயக்க மருந்து தந்து அறுவைசிகிச்சை செய்தால் இறந்துவிடுவார் என்ற நிலை. நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவரது மனைவி கதறினார். அப்போதும் முயற்சி செய்வோம் என நினைத்து, 5 மணிநேரம் அறுவைசிகிச்சை செய்து பிழைக்க வைத்தேன். முயற்சி செய்தேன், வெற்றி பெற்றேன், மன திருப்தி கொண்டேன். என்றும் முயற்சி செய்யாமல் யாரையும் விட்டதில்லை.

இங்கு விபத்தில் அடிபட்டு வருபவருக்கு முதலில் பல்வேறு பரிசோதனைகள் செய்து, அவருக்கு உண்டான பாதிப்பைக் கண்டறிந்து, அதற்குண்டான மருத்துவரிடம் அனுப்பி வைப்பேன். அந்த நோயாளி வீட்டுக்கு நலமாக செல்லும்வரை பார்த்துக்கொள்வது என் பொறுப்பு.

ஜி.பி. அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் உடனடியாக வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இன்று மட்டுமல்ல, இனி என்றென்றும் அதை செய்வேன். ஏனென்றால், அவர் என் குருநாதர்’ என்றார்.

சர்க்கரை நோயை வெல்லலாம்!

கே.ஜி. மருத்துவமனையின் சர்க்கரை வியாதி சிறப்பு மருத்துவரும் 47 ஆண்டுகள் அனுபவம் உள்ளவருமான டாக்டர் கிரி கூறியதாவது, “ஒரு அறையில் 10 பேர் இருந்தால், அதில் இருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். மீதி 2 பேருக்கு சர்க்கரை நோய் வெளியே தெரியாமல் இருக்கும். இதில், இரண்டாவது வகைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சர்க்கரை நோயில் பல வகை உண்டு. சிறு குழந்தைக்கு வருவது டைப் 1, பெரியவர்களுக்கு வருவது டைப் 2, கர்ப்ப காலத்தில் வருவது, அலர்ஜி போன்ற ஒரு சில மருத்துவ சிகிச்சை எடுக்கும்போது வருவது, மது சாப்பிட்டு கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் அதன்மூலமும் சர்க்கரை வியாதி வரும். இந்த நோய் ஆண், பெண், குழந்தை, ஏழை, பணக்காரன் என யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

இதனுடைய விளைவுகள் ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், பிரைன் ஸ்ட்ரோக், ஆறாத புண்கள், கண் பார்வை மங்குவது போன்றவை. இது 90% பரம்பரை வியாதி ஆகும். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எனக் குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருந்தால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு  கண்டிப்பாக சர்க்கரை வியாதி வரும். குடும்பத்தில் யாருக்கும் இல்லை என்றாலும் இந்நோய் வர சாத்தியம் உண்டு.

அதிகப் பசி, அதிக சிறுநீர் வெளியேற்றம், தண்ணீர் தாகம் எடுப்பது, உடம்பு இளைத்துப்போவது, உடலில் எங்காவது புண் வந்தால் ஆறாதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

இதற்கான சிகிச்சை, 20 சதவீதம் டாக்டர் கையில் என்றால், 80 சதவீதம் நோயாளியின் கையில்தான் இருக்கிறது. காலை, மாலை அரை மணி நேரம் நடக்க வேண்டும். மருத்துவர் சொல்படி, சரியான நேரத்திற்கு ஆகாரம் உண்ண வேண்டும். உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம், நோயை வென்று, நீண்டநாள் உயிர் வாழலாம்’ என்றார்.

பொதுநல மருத்துவத்திலும் சிறப்பு கவனம்!

கடந்த 33 வருடங்களாக கே.ஜி. மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பொதுநல மருத்துவர் சிந்து கூறுகையில், “பொதுநல மருத்துவர்கள் குறிப்பாக சிக்கலான நோய்களைக் கொண்ட நோயாளிகளைக் கவனிப்பதற்கும்; நோயாளியின் பல்வேறு பிரச்னைகளைக் கண்டறிதல், சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெறவும்; நோயின் சமூக மற்றும் உளவியல் தாக்கத்தை சமாளிக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

மேலும், அறுவைசிகிச்சை அல்லாத பல்வேறு சுகாதார சேவைகளை வழங்குகிறார்கள். கடினமான, தீவிரமான அல்லது அசாதாரணமான மருத்துவப் பிரச்னைகளைக் கவனித்து, அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படும்வரை அல்லது உறுதிப்படுத்தப்படும்வரை நோயாளியைத் தொடர்ந்து கவனிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பொதுநல மருத்துவர்களாகிய நாங்கள் இங்கு அனைத்து வகையான மருத்துவப் பிரச்னைகளுக்கும் சிறந்த சிகிச்சை அளித்து வருகிறோம். இங்கு இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியதில், 5,000 பேர் தங்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் இன்றும் என்னை அணுகுகின்றனர். காரணம், இங்கே நோயாளிகளின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காண்கிறோம். அத்துடன், எங்கள் சிகிச்சையல் திருப்தியாகவும் இருக்கின்றனர்.

மருத்துவ பிரச்னைகளுக்குத் தீர்வு அளிப்பதுடன், நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை அறிவுரைகளையும் வழங்குகின்றோம். சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எவ்வாறான உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் எனும் பொது அறிவுரைகளும் வழங்குகிறோம். இதன்மூலம் மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான உறவு வளர்ந்துள்ளது.

சில நோயாளிகளின் கடைசித் தருணங்களில் இறுதி கவனிப்பை சிறப்புடன் அளிக்கிறோம். மிகவும் சவாலான கோவிட் காலகட்டத்தில்கூட எங்களால் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவர்களை முறையாக பராமரித்துக்கொண்டோம். பெரிய அளவில் ஆய்வு செய்து சிகிச்சை வழங்காவிட்டாலும், நோய்க்கான சிறந்த தீர்வுகளை பரிந்துரை செய்கிறோம். மூளையில் கட்டி, நீண்ட நாள்பட்ட தலைவலி போன்ற காரணங்களுக்காக வருவோருக்கு நரம்பியல் மருத்துவரையும், சாதாரண காய்ச்சல், தலைவலி என்று வருவோர்க்கு சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான மருத்துவரையும் பரிந்துரைப்போம்.

மகளிர்நல மருத்துவர்களிடம், பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பிற சந்தேகங்களை வெளிப்படையாகப் பகிர்வதை எப்போதும் மிகவும் வசதியாக உணர்கிறார்கள். அதற்கேற்ப நாங்களும் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். கே.ஜி. மருத்துவமனையில் அமைந்திருக்கும் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட பொதுநல மருத்துவக்குழு, உங்கள் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு அளிப்பதோடு நிம்மதியையும் வழங்குகிறது’ என்றார்.

நுரையீரலைப் பாதுகாப்பது நம் கடமை!

கே.ஜி. மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் மகேஸ்வரன் நுரையீரலில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், இந்நோயின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது, ‘மனிதனுக்கு மிகவும் முக்கியமானது நுரையீரல். மூச்சுக்குழாய், நுரையீரல் இவற்றில் நிறைய தொந்தரவு வருகிறது.

நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் இருமல், சளி தொந்தரவுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த விதமான நோய் தாக்கி உள்ளது என சில பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து அதற்கான மருத்துவம் அளிக்க வேண்டும். அதனை நாங்கள் சிறப்புடன் செய்துவருகிறோம்.

இந்திய மருத்துவ சுகாதாரத் துறையைத் தொடர்ந்து, காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நாங்களும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளோம். இருமும்போது டி.பி., ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப்  பரவ வாய்ப்பு உள்ளது. எனவே நுரையீரல் தொற்று, ஃபுளு, கொரோனா, டி.பி. உள்ளவர்கள் மாஸ்க் அணிவது மிகவும் நல்லது.

ஆஸ்துமா, ஒரு பரம்பரைத் தொற்று நோயாகும். அவை வீட்டில் உள்ளவர்களுக்கு பரவுவதற்கு முன்பாக முறையான சிகிச்சை எடுத்து, அதில் இருந்து விடுபட வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் சிகரெட் பிடிக்கும்பொழுது குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என அருகில் இருப்பவர்களுக்கும் பரவுகிறது. இதனால் குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் பிரச்னை, நுரையீரல் பிரச்னை ஏற்படுகிறது.

சிகரெட் பிடிப்பதால் நுரையீரலில்  கேன்சர் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், நுரையீரல், இரத்தக்குழாய், மூச்சுக் குழாய் பாதிப்படையும், நோய் தொற்றை உருவாக்கும். எனவே, உடனடியாக இப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. இதன்மூலம் சுவாசக் குழாய், நுரையீரல்கள் மிகவும் சிறப்பாக இயங்குவதை கண்டுபிடிக்க முடியும்.

வீட்டில் கொசுவர்த்தி, குட்நைட் போன்றவை பயன்படுத்துவதை ‘இன்டர் பொல்யூஷன்’ என்று சொல்வோம். வீட்டுக்குள்ளேயே  அதனை நாம் தொடர்ந்து சுவாசிக்கும்பொழுது நாளடைவில் அவை நோய்த் தொற்றாக மாறுகிறது. இதற்கு பதிலாக கொசுபேட், கொசுவலை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறெல்லாம் நுரையீரலை மிகவும் சிறப்பாக பாதுகாப்பது என்பது நம் கடமையாகும்’ என்றார்.

உடலை மதிக்க வேண்டும்!

கே.ஜி. மருத்துவமனையில் குடும்ப நல மருத்துவராகப் பணிபுரியும் ராஜா கூறியதாவது, ‘சாதாரண காய்ச்சல், தலைவலி, வாந்தி என்றால் ஆரம்ப நிலையில் சில மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் ஓரிரு நாட்களுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். அதுவே நாட்பட்ட பாதிப்பு அல்லது காய்ச்சல், தலைவலி, வாந்தி ஆகிய மூன்றும் ஒருசேர இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பாதிப்பிற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சைகளைத் தொடங்க வேண்டியது அவசியம்.

இந்த நிலையில்தான் குடும்ப நல மருத்துவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஏற்படும்போது, ஒவ்வொரு மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஆரம்பநிலை காய்ச்சலுக்கான சிகிச்சைகளையே மேற்கொள்வர். அதுவே, உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் செல்லும்போது, அவருக்கு உங்களது குடும்பத்தினர் குறித்தும், அவர்களின் உடல்நிலை, குடும்ப நோய்கள், அவற்றின் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்த பல்வேறு தகவல்களும் முழுமையாகத் தெரிந்திருக்கும். இதன்மூலம் அவரால் உங்களுக்கு முறையான சிகிச்சைகளை உடனே வழங்க முடியும். இதுவே குடும்ப நல மருத்துவரின் தனித்துவம் ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் 30 வயதினருக்கே இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், நமது உடலை நாமே மதிக்காமல் இருப்பதுதான். நமக்கு ஆரோக்கியமான உணவு எதுவென்று அறிந்து அந்த உணவை உட்கொண்டாலோ, சரியாக உடற்பயிற்சி செய்தாலோ நமது உடல் ஆரோக்கியம் எப்போதும் சரியாக இருக்கும். பல்வேறு நோய்களின் பாதிப்பில் இருந்து உடல் பாதுகாக்கப்படும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதனை கடைபிடிப்பது இல்லை. இந்நிலையை மாற்றி, நமது உடலுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

மேலும், தற்போது மன அழுத்தம் என்பது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பதின்பருவத்தினருக்கு மன அழுத்தம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனை சரி செய்ய குடும்ப நல மருத்துவரின் மருத்துவ ஆலோசனைகள் மிகவும் பயனளிக்கும். எனவே, எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றை அலட்சியம் செய்யாமல் உங்கள் குடும்ப நல மருத்துவரை அணுகி மன உறுதியோடு சிகிச்சை மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட வேண்டும். நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திட வேண்டும்’ என்றார்.

இரைப்பை புற்றுநோய் கண்டறிய அதிநவீனக் கருவிகள்!

கே.ஜி. மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது, ‘புற்றுநோய் சிகிச்சைக்கு ஹீமோதெரபி, ரேடியோதெரபி போன்றவை இருந்தாலும் அறுவைசிகிச்சையே பிரதானமானது.  ஆரம்பக்கட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிய எண்டோஸ்கோபி  மூலமாக மேல் தொண்டை, நடுத் தொண்டை, கீழ் தொண்டை, இரைப்பை, மலக்குடல், குடல் போன்றவற்றைப் பார்க்க முடியும். லேப்ரோஸ்கோபி மூலமாக வயிற்றுப் பகுதி, மார்பகத்தின் உள் பகுதிகளில் பாதிப்பு உள்ளதா என்பதைப் பார்க்க முடியும்.

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை எழுந்தவுடன் தலைவலி இருக்கும். வாந்தி வருவது போன்ற உணர்வும், குமட்டலும் ஏற்படும். எந்த நேரமும் தலை பாரமாக இருப்பதாகவே உணர்வார்கள். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கே.ஜி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் ஹீமோதெரபி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.

எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாவிட்டாலும், 40 வயதைக் கடந்த பெண்கள் சுய பரிசோதனை செய்வது அவசியம். மாதவிடாய் முடிந்து மூன்றாம் நாள், கண்ணாடி முன் நின்று வலது மார்பகத்தை இடது கையாலும், இடது மார்பகத்தை வலது கையாலும் தொட்டுப் பார்த்து வித்தியாசங்கள் இருக்கிறதா என சோதித்து பார்க்க வேண்டும். அப்போது, முலைக்காம்பு உள்வாங்குதல், சீழ் வடிதல், கட்டிகள்  தென்படுதல், தடிப்புத் தன்மை, ஒரு மார்பகம் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருத்தல் போன்ற வித்தியாசங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

துரித உணவுகள், முறையற்ற தூக்கம், காரம் அதிகம் உண்ணக் கூடியவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கும், கிணற்று நீரை அதிகம் குடிப்பவர்களுக்கும் வயிற்றுப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இதனை எண்டோஸ்கோபி மூலம் கண்டறியலாம்.  கே.ஜி. மருத்துவமனையில் இதற்கான அதிநவீனக் கருவிகள் உள்ளன. இவற்றின் மூலம் இரைப்பை புற்றுநோயைக் கண்டறிய முடியும்.

40 வயதைக் கடந்தவர்கள், உடல் வலி, குமட்டல், சோர்வு உடையவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே எந்த ஒரு நோயையும் கண்டறியலாம்.  மேலும் இதன் மூலமாக  சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இருதயக் கோளாறுகள், புற்றுநோய் ஆகியவற்றையும் கண்டறியலாம்.

முழு உடல் பரிசோதனையின்போது, இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். அடுத்து, அல்ட்ராசவுண்ட் மூலம் (மேலோட்டமாக) இருதயம், நுரையீரல், வயிற்றுப் பகுதியில் உள்ள பிரச்னைகளை கண்டறியலாம். அடுத்தகட்டமாக, சி.டி, ஸ்கேன் மூலமாக உடல் உறுப்புகளில் உள்ள பிரச்னைகளைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்’ என்றார்.

நோயை முன்னறிவிக்கும் முழு உடல் பரிசோதனை!

கே.ஜி. மருத்துவமனையில் பல வருட அனுபவம் மிகுந்த  முழு உடல் பரிசோதனைப்  பிரிவு சிறப்பு மருத்துவர்  நடராஜன் கூறியதாவது,

‘மனிதனுக்கு நோய் வந்துகொண்டேதான் இருக்கும். தொற்று சேர்ந்த வியாதி, தொற்று சேராத வியாதி இந்த இரண்டு நோயையும் முழு உடல் பரிசோதனையால் நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியும். தொற்று சேரா வியாதியால் சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரகம் சம்பந்தமான நோய் ஆகிய மூன்றும் வரும். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே மூலம் இவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

40 வயதில் முதல் முறையாக முழு உடல் பரிசோதனை செய்யும்போது, ஒரு நோயின் தன்மையை நம்மால் சொல்ல முடியும். வருமுன் காப்போம் என்பதற்கேற்ப இதனை ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டும். வியாதி வருவதற்கு முன்னால் அதனைக் கண்டறிந்து வைத்தியம் செய்ய வேண்டும் என வள்ளுவர் கூறியிருக்கிறார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், நோய் வரக்கூடாது என்பதுதான் நம் எல்லோருடைய ஆசையுமாக உள்ளது. கே.ஜி. மருத்துவமனையின் ஆசையும் அதுதான்.

குடும்பத்தில் யாருக்கேனும் இருதய பிரச்னை இருந்தால், அதாவது  அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் பையனுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு 80 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்கள் மருத்துவமனையில், தினமும் 50 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறோம். அனைவரும் திருப்தியுடன் செல்கின்றனர்.  என்ன பிரச்னை இருந்தாலும் உடனே சொல்லி விடுகிறோம். அதனால் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல திட்டமாகவும் இது அமைந்துள்ளது. எனவே அனைவரும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மூலமாக உடல் நலம் காக்க வேண்டும்’ என்றார்.

அனைத்துப் பரிசோதனைகளும் ஒரே இடத்தில்!

கே.ஜி. மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைத் துறை மருத்துவர் ராமச்சந்திரன் கூறியதாவது, ‘நமது உடலின் முக்கிய உறுப்புகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, உடலுக்குள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முழு உடல் பரிசோதனை நமக்கு உதவுகிறது.

இருதய மருத்துவத்தில் சிறப்பு ஆர்வமுள்ள பொதுநல மருத்துவராக எனக்கு சுமார் 50 வருட அனுபவம் உள்ளது. இத்துறையில் நோய் உள்ளவர்களையும், நோய் இல்லாதவர்களையும், நோய் இருந்தும் அதுபற்றி அறியாதவர்களையும் கவனித்து வருகிறோம். மக்களை நோயின்றி பாதுகாப்பதே எங்கள் பணியின் முக்கியத்துவம்.

முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களில் முதலில் சிலருக்கு அவர்களுக்கே தெரியாமல் இரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை வியாதி, கல்லீரல், சிறுநீரக நோய்கள் இருக்கக்கூடும். இவற்றை ஆரம்பத்திலேயே முழு உடல் பரிசோதனை மூலமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

இரண்டாவதாக, சிலருக்கு இருதயம், கல்லீரல், கணையம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க நோய்கள் இருப்பது தெரியும். அவர்களுடைய நோயின் தன்மை குறித்த ஆய்வு முடிவுகளுடன் உடனடியாக அந்தந்த நோய் சார்ந்த துறை நிபுணர்களிடம் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம்.

மூன்றாவது, முற்றிலும் எந்த நோய் தாக்குதலுக்கும் ஆட்படாதவர்கள். அவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் நம்பிக்கையுடன் வீட்டிற்குச் செல்லலாம். இருப்பினும் அவர்களுக்கும் புகைபிடிப்பதை நிறுத்துங்கள், நல்ல உடற்பயிற்சி, மேலான உணவு முறையை கடைபிடியுங்கள் என அறிவுரைகள் வழங்குவோம். எங்கள் துறையில் அடிப்படை பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும் அதாவது, பல், கண் மருத்துவம், எக்ஸ்ரேஸ், இரத்த பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன்கள் மற்றும் மருத்துவர்களின் கவனிப்பு எப்பொழுதும் இருக்கும்.

எங்கள் மருத்துவமனைத் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்களுக்கு சிறந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது. அவர் இந்த முழு உடல் பரிசோதனை துறையில் அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் நிறுவியதோடு இவ்வசதியை துறைத் தலைவர் வசந்தியின் உதவியுடன் நேரடியாகக் கண்காணிக்கிறார்.

முழு உடல் பரிசோதனை செய்வதற்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு மட்டும் சற்று கால அவகாசம் தேவைப்படும். இப்பரிசோதனை செய்த 3 அல்லது 4 மணி நேரங்களிலே சிகிச்சை பெறுவோர் வீடு திரும்பி விடலாம். எனினும், குறிப்பிடத்தக்க நோய் எதுவும் இல்லை எனும்போது, எதற்காக மருத்துவமனை சென்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே அலைய வேண்டும் என்று பலரும் முழு உடல் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர்.

ஆனால், எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் அனைத்துப் பரிசோதனைகளும் ஒரே இடத்தில் நடத்தப்படுவதால் நீங்கள் கவலையின்றி எங்களிடம் வந்து உங்கள் உடலைக் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு சிறப்பான சிகிச்சை பெறலாம். உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு மகிழ்ச்சி’ என்றார்.