கோவை லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்.

கோவை அவிநாசி சாலையில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1.621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்கதிட்டமிடப்பட்டன. தற்போது வரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்படும் முக்கிய சந்திப்பு களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது லட்சுமி மில் சந்திப்பில் தூண்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர் கூறும் போது, நவஇந்தியா சந்திப்பு, புலியகுளம் சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள், லட்சுமி மில் சிக்னல் அருகே சில மீட்டர் தூரம் தள்ளி உள்ள சர்க்கியூட் ஹவுஸ் சாலையில் உள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து காந்திபுரம் செல்லலாம்.

காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வழியாக புலிய குளம், அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகன ங்கள் லட்சுமி மில் சந்திப்பை அடைந்து அவிநாசி சாலையில் இடதுபுறம் திரும்பி, சில மீட்டர் தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இதே யூடர்ன் வழியாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பில் இருந்தும்,புலியகுளம் செல்லும் வாக னங்களும் செல்லலாம். நவஇந்தியா சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு நோக்கி வருபவர்கள் மீண்டும் நவ இந்தியாவுக்கு யூடர்ன் செய்து செல்லவும் வழி வகை செய்யப்ப ட்டுள்ளது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் கூறும்போது, அவிநாசி சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், சிக்னலுக்காக காத்திருக்காத வகையிலும், யூடர்ன் செய்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்ப ட்டுள்ளன.

இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சீராக சென்று வருகின்றன என்றார்