8 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தி ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் வரலாறு படைத்தது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாரம்பரிய நகை நிறுவனமான ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் 8 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து, வரலாற்றில் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நகை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த முக்கியமான நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பலக்னுமா அரண்மனையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாலிவுட் நடிகை திஷா பதானி உட்பட புகழ்பெற்ற பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஷிவ் நாராயணின் மதிப்புமிக்க நகைகளை அணிந்துகொண்டு திஷா பதானி தோன்றினார். இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக ‘பரிசோதனை பகுதி’ அமைந்தது. இது கின்னஸ் சாதனை படைத்த நகைகளை நேரடியாக உணர்வதற்கு ஏற்ற ஒரு காட்சிப்படுத்தும் அனுபவமாக அமைந்தது.

நான்கு சாதனை படைத்த படைப்புகளில் முதலாவது கணேஷ் பெண்டன்ட் 1011.150 கிராம் எடை, ராம் தர்பார் பெண்டன்ட் 1681.820 கிராம், எனும் அதிக எடை, அதிக வைரங்களைக் கொண்ட பெண்டன்ட் என பெருமைகளைப் பெற்றது. சட்லடா நெக்லஸ் இந்த பிராண்டின் மூன்றாவது சாதனை படைத்த படைப்பாகும். இது ஏழு அடுக்கு  மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் ஆகும். ஆடம்பரத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தும் ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸின் பூதக்கண்ணாடி பெறக்கூடிய மதிப்பு 108,346 அமெரிக்க டாலர். இதுவே உலகின் மிகவும் விலை உயர்ந்த பூதக்கண்ணாடி ஆகும்.