பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான பேகர் ஹியூக்ஸ் (Baker Hughes) பண்ணாட்டு தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்வில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, பேகர் ஹியூக்ஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் முதன்மை மேலாளர் அனந்த பத்மநாபன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் முதல்வர் அசோக் மற்றும் துறைத் தலைவர்களும் உடனிருந்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு நல்ல தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்த வழிவகை செய்யும்.