மக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் திறப்பு

கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66 வது வார்டில்  சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் தெற்கு சட்டமனற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார்.