கருப்பையக கருத்தடை சாதனங்கள் குறித்த கருத்தரங்கு

மகப்பேறுக்கு பிறகான தற்காலிக கருப்பையக கருத்தடை சாதனம் பொருத்தும் முறை மற்றும் அகற்றும் முறையை அறிந்துகொள்ளும் நோக்கில் கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு மூன்று நாள் நடைபெற்றது. கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி தலைமையுரை ஆற்றினார். கோவை மருத்துவக் கல்லூரியின் சமூக சுகாதார மருத்துவத் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் அபர்ணவி சிறப்புரை ஆற்றினார். சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஜானகி சிறப்பு செய்முறை வகுப்புகள் நடத்தினார், இதில் இளநிலை செவிலியர் நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.