இந்துஸ்தான் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கோயம்புத்தூரில் உள்ள எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட், தலைமை டிஜிட்டல் மாற்றம், இயக்குநரகத்தின் இயக்குநர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முதல்வர் ஜெயா தலைமை உரையாற்றினார். 20க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதலிடம் மற்றும் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், டீன் மகுடீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

கல்லூரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணைச் செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டினர்.