அவினாசிலிங்கம் பல்கலையில் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் 18 முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மையர் வாசுகி மனையியல் புலம் தலைமையுரை ஆற்றினார். மாணவியர் நலன் முதன்மையர் உமாமகேஸ்வரி சிறப்புரையாற்றினார். பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கண், பல், இதயம், எலும்பு, சருமம், முடி, நெகம், பெண்ணோயியல், ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் தொடு வர்மம் ஆகிய மருத்துவர்கள் வருகை தந்து முகாமை சிறப்பித்தனர். இம்முகாமினை தேசிய நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா மற்றும் பல்வேறு திட்ட அலுவலர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். இதில் சுமார் 1,230 மாணவிகள் கலந்து கொண்டனர்.