புதிய கழக உறுப்பினர்கள் சேர்க்கை 

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பீளமேடு மசக்காளிபாளையம் பழனிச்சாமி கோனார் வீதியில் கழக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் வட்டக்கழகச் செயலாளர் மா.சிவக்குமரன், பகுதி பொருளாளர் ரங்கநாதன், பகுதி துணைச்செயலாளர் நாகராஜ், தண்டபாணி, வட்டப் பிரதிநிதிகள் ராமதாஸ், ஜோதி, ராஜேந்திரன், சின்னச்சாமி, திலக்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.