புதிய கழக உறுப்பினர்கள் சேர்க்கை

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பீளமேடு ராம்லட்சுமணன் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று கழக புதிய உறுப்பினர்களைச் சேர்த்தார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியம், வட்டக்கழக துணைச் செயலாளர் சசிகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.