கோவையில் நடைபெறும் ஜோனிதா காந்தியின் கச்சேரி சில டிக்கெட்டுகளே விற்பனைக்கு உள்ளது

கோவை கொடிசியா மைதானத்தில் பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் இசை கச்சேரி வரும் ஞாயிறு (பிப்ரவரி 26) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழ் திரையுலகில் மிகவும் சிறு காலத்தில் தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்த இவருக்கு ஒரு ரசிகர் படையே உள்ளது. தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக நடைபெறும் இவரது கச்சேரிக்கு டிக்கெட் விற்பனை ஜனவரி மாதம் இறுதியில் துவங்கியது.

இளசுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இந்த இசை கச்சேரிக்கு உள்ளது என்பதால் பெருமளவு டிக்கெட்டுகள் துவக்கம் முதலே விறுவிறுப்பாக விற்பனை ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்த நிலையில் இன்னும் சில டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. டிக்கெட்டுகள் Paytm Insider, BookMyShow மற்றும் sporfy போன்ற அண்ட்ராய்டு ஆப்களில் கிடைக்கும்.