ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, கங்கா நர்சிங் கல்லூரியின் டீன் மற்றும் முதல்வர் எஸ்தர் ராகேல் பங்கேற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மை செவிலியர் அதிகாரி கற்பகம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சிறப்பு விருந்தினர் எஸ்தர் ராகேல், மாணவர்களிடையே உரையாற்றி, நர்சிங் பயிற்சி செய்வதற்கான அணுகுமுறை, திறன், அறிவு ஆகியவற்றை வலியுறுத்தி, கல்வியில் சிறந்து விளங்க அவர்களைத் அறிவுறுத்தியதுடன், வெற்றிகரமான வாழ்க்கைக்கான பாதையை உருவாக்க வலியுறுத்தினார்.