கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் பள்ளிக்கு வெளிப்புற அரங்கம் அர்ப்பணிப்பு விழா

கோவை ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா நினைவாக கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட வெளிப்புற அரங்கம் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

வெளிப்புற அரங்கம் அர்ப்பணிப்பு சான்றிதழை கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரவிந்திரன் வழங்கிட, அதனை கோயம்புத்தூர் வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் மூத்த கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இந்தர் சந்து, துரைராஜ், ராமகிருஷ்ணன், ஏ எம் எஸ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.