கே.பி.ஆர் கல்லூரியில் தகவல் தொடர்புத் திறன் பயிற்சிப் பட்டறை

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை தொழில்முறை கணக்கியல் துறை சார்பாக “ தகவல் தொடர்புத் திறன் பயிற்சிப் பட்டறை” நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். வணிகவியல் புல முதன்மையர் குமுதாதேவி, மற்றும் வணிகவியல் துறையின் இணைப்பேராசிரியர் & தலைவர் கார்த்திகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மென்டோரா, நிறுவனர் மற்றும் மென் திறன் பயிற்சியாளர் ஆர்த்தி, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சியளித்தார். தலைமை மற்றும் குழுத் திறனை மேம்படுத்துவது பற்றி அவர் விவரித்தார். பொதுவாக வேலைவாய்ப்பில் தொடர்புத் திறன் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கக்காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கியுரைத்தார். இப்பயிலரங்கில் சுமார் 110 மாணவர்கள் மற்றும் 4 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.