கற்பகம் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

கற்பகம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார். ஒவ்வொரு துறையிலும் பொங்கல் வைத்து சிறப்பிக்கபட்டது.

இவ்விழாவை ஒட்டி கல்லூரி மாணவர், மாணவியர்களுக்கு கயிறு இழுத்தல், உரி அடித்தல் மற்றும் கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவினை கொண்டாடினர்.