சரியான நேரத்தில் இயங்காத அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயங்காமல் இருப்பத்தை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்து காடுவெட்டிபாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் குறித்த நேரத்தில் பணிக்கும், பள்ளி கல்லூரிக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த சுழலில், நல்ல கவுண்டன்பாளையம் பொதுமக்கள் கிராமத்திற்கு வந்த 6 என்ற இலக்கமிட்ட அரசு பேருந்தை சிறைபிடித்து, சரியான நேரத்தில் இயங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.