கொரோனா பரவல்: மக்கள் சுய கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், அதனால் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியம் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை அடுத்து, அவருடன் விமானத்தில் பயணித்த 70 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏதும் இல்லை எனக் கூறிய அவர், மக்கள் சுய பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனவும், முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறியுறுத்தினார்.

மதுரையை அடுத்த விருதுநகரை சேர்ந்த தாய், மகள் 2 பேருக்கு கொரோனா செய்யப்பட்டு உள்ளதையொட்டி இருவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். புதியவகை கொரோனா தொற்று இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் எனக் கூறினார்.