கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் (கே.ஐ.டி) ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் டெக்னாலஜி எனேபிளிங் சென்டர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்விழாவில் IQAC தலைவர் பிரசாந்த் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், டீன்-மாணவர் அமைப்பு சுரேஷ், கல்வி & ஆராய்ச்சி டீன் ராமசாமி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் சாந்தி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.