கே.பி.ஆர் மில் லிமிடெட்-ன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு

கே.பி.ஆர் மில் லிமிடெட்-ன் கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வியியல் பிரிவில் கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆலையில் பணி செய்து விட்டு பகுதி நேரமாக பட்டப் படிப்பு படிக்கும் இம்மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர் மருத்துவ துறையின் துறைத்தலைவர் கணேஷ்குமார் “வெற்றி” என்ற பொருண்மையில் திங்கள் அன்று மாணவிகளுக்கு சிறப்புரை வழங்கினார்.