பிஸ்டல் சுடும் போட்டியில் தங்கம் வென்ற கே.பி.ஆர். கல்லூரி மாணவிகள்

தமிழ் நாடு சூட்டிங் அசோசியேஷன் உடன் இணைக்கப்பட்ட ரைபிள் கிளப் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் சுடுதல் போட்டி கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுடுதல் கிளப் போன்ற அமைப்புகளிலிருந்தும், பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் தேசிய மாணவர் படையை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படையை சார்ந்த மாணவிகள் கலந்துகொண்டு ‘ஏர் ரைபிள்’ இளம் பெண்கள் பிரிவில் ஆர்த்தி தங்கப்பதக்கமும், ஜூனியர் பிரிவில் அர்ச்சனா தங்கப்பதக்கமும், அதே பிரிவில் கீர்த்தனா வெள்ளிப்பதக்கமும், சுபா வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் காவல் துறை இயக்குனர் வால்டர் தேவாரம் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.