கே.எம்.சி.ஹெச் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நடைபயணம் வ.உ.சி. பூங்காவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கௌரவ விருந்தினராக மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து நடைபயணத்தை துவக்கி வைத்தனர்.

மேலும், இதில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் எக்ஸிக்யூடிவ் இயக்குனர் அருண் பழனிசாமி, இன்டர்வென்ஷ்னல் ரேடியாலஜி மருத்துவர் மேத்யூ செரியன், மருத்துவர் ரூபா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.