முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு ஏற்பட்டது அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.