இந்துஸ்தான் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி உயிரி தொழில்நுட்பவியல் துறையில், டிபிடி ஸ்டார் காலேஜ் ஸ்கீம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் செயலாளர் பிரியா சதீஷ்பிரபு கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தனர்.

முதுகலைதொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த சுமார் 180 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் வரை டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் பேரணி சென்றனர். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் மற்றும் துறை பேராசிரியர்கள் வழிகாட்டல் உடன் பேரணி நடைபெற்றது.