மகிழ்வித்து மகிழ் சார்பில் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு மையத்திற்கு மருத்துவ உதவி

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் பீப்பிள் இணைந்து மகிழ்வித்து மகிழ் சார்பில் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு மையத்திற்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது.

மண்டலத் தலைவர் லயன் மணிவண்ணன் தலைமையில் நீலகிரியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் உள்ள மருந்து மாத்திரைகளை வட்டாரத் தலைவர் லயன் செந்தில்குமார் வழங்கினார்.

இதில் மறுவாழ்வு இல்லத்தின் பொறுப்பாளர் நான்சி, நேரு நகர் லயன்ஸ் சங்க செயலாளர் மோகன்ராஜ் வட்டாரத் தலைவர் ஸ்ரீராம், உதயம் லயன்ஸ் சங்க செயலாளர் ராஜாராம், துணைத் தலைவர் சந்துரு, ஆசிரியர் அருள்மேரி, ரேவதி காப்பாளர்கள் விஜயகுமாரி, கோகிலா, வள்ளி மலர் மற்றும் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.