அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் வித்யாசங்கர் மற்றும் சிறப்பு விருந்தினர் மனோஜ்குமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதன் நோக்கத்தைப் பற்றி விளக்கினார். விழாவில் திருப்பூர் சுவாமி நூற்பாலைத் தலைவர் மனோஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவின் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். பெற்றோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.