பி.எஸ்.ஜி கல்லூரியில் விமானப் படை சார்பில் கருத்தரங்கம்

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய விமானப் படை சார்பாக விமானப் படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் இந்திய விமான படை அதிகாரி Squadron Leader ஹேமந்த் சிங் கன்யல் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து விமான படை சார்பில் விழிப்புணர்வு வாகனம் ஒன்று மாணவர்கள் பார்வையிடுவதற்காக காட்சிக்கு வைக்கப்பட்டது.