ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியல் கல்லூரியில் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துடியலூர் காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன் கலந்து கொண்டு உறுதி ஏற்பு வாசகத்தை முன்மொழிய மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் அவர் உரையாற்றும் போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த போதைக்கு எதிரான இயக்கம் (டிஏடி) பற்றிய பல்வேறு விஷயங்களை மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி தேசியக் கொடியை ஏந்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். விழாவிற்கு கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி, பேராசிரியர் கோபு, தேசிய மாணவர் படை துறை அதிகாரி ரமேஷ், உடற்பயிற்சி அதிகாரி நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.