கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் வன்முறையில் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் என அறிவித்துள்ளார்.

மேலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.