குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆய்வு

கோவை வடவள்ளி, குருசாமி நகர், லட்சுமி நகர், பொம்மனாம்பாளையம் பிரிவு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய முடிவுற்ற இடங்களை நேரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், வியாழக்கிழமையன்று பார்வையிட்டார். மேலும், குடிநீர் குழாய் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்ட தார்சாலைகளை உடனடியாக செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைதமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, உதவி பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.