கோவை மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தில் வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

கோவையில் தேசிய சுகாதார குழுமத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் இருப்பதாகவும், அதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பாட்டு வரும் பல்வேறுத் திட்டங்களின் மூலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் உள்ளது.

இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்த விண்ணப்பபடிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜூலை 25 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.