மேக்கப் துறைக்கு நல்ல டிமாண்ட் உள்ளது-பிக்பாஸ் சம்யுக்தா

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சிட்டி ஒன் நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கு மேக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அழகு கலை நிபுணர் ஒலிவியா என்பவரால் ஒரு நாள் வகுப்பு எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் சம்யுக்தா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்: மேக்கப் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த மேக்கப் துறையால் பல பேர் நன்மை அடைந்து வருகின்றனர். ஒரு சில பெண்கள் பகுதி நேரமாக மேக்கப் தொழிலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். பொதுவாக பெண்கள் வீட்டை பார்த்துக் கொள்வது, வேலைக்கு செல்வது என்பது போன்ற பணியில் இருந்தாலும் மேக்கப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருகிறார்கள்.

தற்போது மேக்கப் துறைக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. அதேபோல சிறிய பங்க்ஷனில் இருந்து பெரிய நிகழ்ச்சி வரை அனைத்திற்கும் தற்போது மேக்கப் ஆர்டிஸ்ட்களை நாடுகின்றனர். மேலும் சினிமா துறையில் மேக் அப் ஆர்டிஸ்ட்டுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

மேலும் கருப்பாக இருக்கும் பெண்கள் மேக்கப் போட்டால் நன்றாக இருக்காது என்பது தவறான புரிதல். கருப்பாக இருந்தாலும் நாம் அழகாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். கருப்பும் வெள்ளையும் ஒன்றும் தான் என தெரிவித்தார்.